"ஜூன் 23 முதல் இந்தியாவிற்கு மீண்டும் விமான சேவை" - ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

0 4434

ரும் 23-ஆம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவித்து உள்ளது.

மேலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்று வேண்டும் என்றும், விமானம் ஏறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பும் துபாயில் தரையிறங்கியதும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது., பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் தனிமைப்படுத்துதலை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments